சொற்பொருள்
கோள் | - | துணிபு |
வீறு | - | செய்தல் |
நன்றி | - | நன்மை |
பனை | - | ஒரு பேரளவு |
கேண்மை | - | நட்பு |
விழுமம் | - | துன்பம் |
தலை | - | சிறந்த அறமாகும் |
இன்மை | - | வறுமை |
வன்மை | - | வலிமை |
பொறை | - | பொறுத்தல் |
நிறை | - | சால்பு |
அற்றம் | - | அழிவு |
ஓரீஇ | - | நீக்கி |
கூம்பல் | - | குவிதல் |
நோய் | - | துன்பம் |
ஊறு | - | பழுதுபடும் வினை |
ஆறு | - | நெறி |
கொட்க | - | புலப்படும் படி |
திண்ணியர் | - | வலியர் |
வெய்யோன் | - | கதிரவன் |
ஈர்வளை | - | அறுத்து செய்யப்பட்ட வளையல் |
இலங்கு | - | ஒளிருகின்ற |
தோளி | - | கண்ணகி |
முறை | - | நீதி |
நிறை | - | கற்பு |
படுகாலை | - | மாலைக்காலம் |
மாதர் | - | காதல் |
மல்லல் | - | வளம் |
கொற்றம் | - | அரசியல் |
வைவாள் | - | கூரியவாள் |
பழுது | - | உடல் |
கழல் | - | திருவடி |
தையல் | - | திருமகளாகிய சீதாப்பிராட்டி |
திண்டிறல் | - | பேராற்றல் மிக்க இராமன் |
மற்று | - | மேலும் |
திரை | - | அலை |
தனயை | - | மகள் |
உம்பி | - | உன் தம்பி |
கனகம் | - | பொன் |
அலங்கல் | - | மாலை |
திருக்கம் | - | வஞ்சனை |
வீங்கினள் | - | பூரித்தாள் |
தோகை | - | மயில் |
முளரி | - | தாமரை |
இறைஞ்சி | - | வணங்கி |
ஓதி | - | கூந்தல் |
துறத்தி | - | கைவிடுக |
மருகி | - | மருமகள் |
தடந்தோள் | - | அகன்ற தோள் |
வேலை | - | கடல் |
சாலை | - | பர்ணசாலை |
கோரல் | - | கொல்லுதல் |
முறிவு | - | வேறுபாடு |
ஆழி | - | மோதிரம் |
மாமணிக்கரசு | - | சூடாமணி |
மாலி | - | சூரியன் |
கரிந்து | - | கருகி |
வியன்வட்டம் | - | அகன்ற கேடயம் |
கிளர்ப | - | நிறைய |
ஓகையால் | - | களிப்பினால் |
கதத்த | - | சினமிக்க |
நிரூபன் | - | அரசன் |
கைவயம் | - | தோள்வலிமை |
ஐஞ்சிலை | - | ஐந்து கற்கள் |
மருகி | - | சுழன்று |
செல் | - | மேகம் |
உருமு | - | இடி |
சிரம் | - | தலை |
ஆலி | - | மலை நீர் |
புடை | - | இடையின் ஒருபக்கம் |
கீண்டு | - | கிழித்து |
தொழும்பர் | - | அடிமைகள் |
வெருவி | - | அஞ்சி |
கல்நெடுங்குவடு | - | மலைச்சிகரம் |
விளி | - | சாவு |
மெய்வயம் | - | உடல் வலிமை |
ஓதை | - | ஓசை |
மிடல் | - | வலிமை |
நுதல் | - | நெற்றி |
மருங்கு | - | இடுப்பு |
அசனி | - | இடி |
மின் | - | மின்னல் |
குறடு | - | அரண்மனை முற்றம் |
பதடி | - | பதர் |
பேழை | - | பெட்டி |
சூளிகை | - | நிலாமுற்றம் |
தெற்றி | - | திண்ணை |
பிணங்கி | - | நெருங்கி |
கோடி | - | வளைந்து |
மகோததி | - | கடல் |
சரதம் | - | வாய்மை |
மூவெழுகால் | - | 21 தலைமுறை |
பெருமாள் | - | அரசர் |
சாளரம் | - | பலகணி |
பாங்கரும் | - | பக்கத்தில் உள்ள இடங்கள் |
மறுகு | - | தெரு |
சதகோடி | - | நூறுகோடி |
உதியர் | - | சேரர் |
பவித்ரம் | - | தூய்மை |
அவனி | - | நாடு |
கூடல் | - | காவிரிப்பூம்பட்டினம் |
கழல் | - | திருவடி |
பத்தி | - | ஊர் |
குஞ்சி | - | தலைமயிர் |
போதன் | - | பிரமன் |
வாசவன் | - | இந்திரன் |
அந்தி | - | மாலை |
வேலை | - | கடல் |
இருக்கு ஆரணம் | - | இருக்கு வேதம் |
கஞ்சம் | - | தாமரை மலர் |
அணங்கு | - | திருமகள் |
பொழில் | - | சோலை |
ஏமவெற்பு | - | மேருமலை |
ஏமம் | - | பொன் |
மலயாசலம் | - | பொதிகை மலை |
பரிதி | - | சூரியன் |
வண்ணம் | - | அழகு |
முகில் | - | மேகம் |
பொய்கை | - | நீர்நிலை |
இருட்கடல் | - | நீலக்கடல் |
களஞ்சியம் | - | தொகுப்பு |
மனோபாவம் | - | உளப்பாங்கு |
சகமக்கள் | - | உடன் வாழும் மக்கள் |
ஒன்று | - | ஓரினம் |
இலகுவது | - | விளங்குவது |
சுவடி | - | நூல் |
சுவடிச்சாலை | - | நூலகம் |
சர்வகலாசாலை | - | பல்கலைக்கழகம் |
வெய்யோன் | - | கதிரவன் |
புரையோடி | - | உள்ளுக்குள் அரிக்கப்பட்டு |
முதல் | - | வேர் |
செல் | - | ஒருவகை கரையான் |
சோங்கி | - | வாட்டமுற்று |
பகட்டு வாழ்க்கை | - | ஆடம்பரமான வாழ்க்கை |
செட்டு | - | சிக்கனம் |
சிந்தை | - | உள்ளம் |
குன்றி | - | குறைந்து |
சாந்தி | - | தெருக்கள் கூடுமிடம் |
சிறுமை | - | இழிவு |
மூடத்தனம் | - | அறியாமை |
மூலதனம் | - | முதலீடு |
காமகோபன் | - | காமனைக் காய்ந்தவன் |
ஆவணம் | - | அடிமையோலை |
ஆனாத | - | குறைவு படாத |
அரம்பையர்கள் | - | தேவமாதர்கள் |
தீர்த்தன் | - | தூயன் |
புராணன் | - | மிகப்பழையன் |
ஏமம் | - | பாதுகாப்பு |
ஆரம் | - | சக்கரக்கால் |
கடிந்தேன் | - | துறந்தேன் |
சாமரை | - | சாமரம் ஆகிய வெண்கவரி |
புடைபுடை | - | இருமருங்கினும் |
இயக்கர் | - | கந்தருவர் |
இரட்ட | - | அசைக்க |
சிங்கவாசனம் | - | அரியணை |
ஆசனம் | - | இருக்கை |
ஒளிமண்டிலம் | - | ஆலோகம் |
நிழற்ற | - | ஒளிர |
சந்திராதித்தம் | - | முத்துக்குடை |
சகலபாசனம் | - | பொற்குடை |
நித்தவிநோதம் | - | மணிக்குடை |
கண்ணி | - | மரியன்னை |
காசினி | - | உலகம் |
வான்கதி | - | துறக்கம் |
மருவ | - | அடைய |
பொறி | - | ஒளிப்பிழம்பு |
ஒளிப்பிழம்பு | - | வடிவினையுடையார் |
நவியார் | - | நபிகள் நாயகம் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]